முன்னுரை
ரமளான் நோன்புக்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஹதீஸ் – 1
‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும். நபிமொழி (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761)
சிறப்புகள்: 1. எழுநூறு மடங்குக்கும் அதிகமான நன்மை 2. அல்லாஹ்வின் நேரடி கூலி 3. கேடயம் 4. கஸ்தூரியை விட சிறந்த வாய் வாசம்.
நன்மையான காரியங்களுக்கு எழுநூறு மடங்கு கூலியை ரமளானில் அல்லாஹ் தருகிறான், ஆனால் நோன்பிற்கு அதை விடவும் அதிகமாக தருகிறான். நோன்பு நரகத்திலிருந்து நம்மை காக்கும் கேடயமாகும். நோன்பு பிடித்திருக்கும் போது இயல்பாகவே ஏற்படும் வாய் வாசம் கூட அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட சிறந்ததாகும்.
ஹதீஸ் – 2
அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக்கூடிய நற்செயல்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நோன்பிருப்பாயாக, அதற்கு நிகரானது எதுவுமில்லை’ என்றார்கள். மீண்டும் அவர்களிடம் சென்றேன்;, அவர்கள் ‘நோன்பிருப்பாயாக!’ என்று சொன்னார்கள். (நூல்கள்: அஹ்மது, நஸயீ, ஹாக்கிம்)
சிறப்புகள்: 5. சொர்க்கத்திற்கு உத்திரவாதம்.
சொர்க்கம் செல்ல நபி (ஸல்) அவர்களால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது தான் நோன்பு.
ஹதீஸ் – 3
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
ஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும். நோன்பு சொல்லும், ‘இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. அவைகளது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது)
சிறப்புகள்: 6. மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு.
குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமளான் என்ற இறுக்கமான தொடர்பு இருப்பதால் நோன்பும் குர்ஆனும் மறுமையில் ஓர் அடியானுக்காக சிபாரிசு செய்கிறது.
ஹதீஸ் – 4
யார் அல்லாஹ்வின் பாதையில் சென்றிருக்கும் போது ஒரு நாள் நோன்பு வைக்கிறாரோ அந்த ஒரு நாள் நோன்பிற்குப் பகரமாக அல்லாஹ் அந்த அடியானின் முகத்தை எழுபது வருட காலம் நரக நெருப்பை விட்டு தூரமாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 2122, நஸயி 2248, ரியாலுஸ்ஸாலிஹீன் 1218)
சிறப்புகள்: 7. நரகத்திலிருந்து பாதுகாப்பு.
நரக நெருப்பை விட்டும் தூரமாக்கக்கூடியது நோன்பு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
ஹதீஸ் – 5
நீங்கள் மிம்பருக்குச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது ‘ஆமீன்’ என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர்.
இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள், நான் ஆமீன் என்றேன். ‘உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ‘தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)
சிறப்புகள்: 8. பாவமன்னிப்புக்கு உத்திரவாதம்.
நமது பாவங்கள் மன்னிக்கப்பட சிறந்த வசந்த காலம் ரமளான் நோன்பு. பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய வகையில் நமது செயல்பாடுகளை அம்மாதத்தில் அமைத்துக் கொள்ளாதவர் நஷ்டவாளிகளே!
ஹதீஸ் – 6
சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)
சிறப்புகள்: 9. சொர்க்கம் பரிசு 10. விஷேசமான சிறப்பு வழி.
நோன்பாளிகள் சொர்க்கம் செல்வார்கள் என்பதையும் அவர்கள் விஷேசமான வழியில் நுழைவார்கள் என்பதையும் அவ்வாயிலில் நுழைபவர்களுக்கு தாகம் ஏற்படாது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
ஹதீஸ் – 7
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)
சிறப்புகள்: 11. இறைவனின் சந்திப்பு. 12. அதனால் மகிழ்ச்சி.
நோன்பாளிகள் இறைவனை சந்திப்பார்கள் என்பதையும் அப்போது அவர்கள் மகிழ்வார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவாக்குகிறது.
முடிவுரை
மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!
islamiyadawa.com – Tamil Islamic Site based on Quran & Hadeeth @font-face { font-family: TheneeUniTx; src: url(http://www.islamiyadawa.com/unieot/THENEE.eot); }
முன்னுரை
அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
1. திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.
ரமாளான் மாதம் மற்ற மாதங்களைப் போன்று ஒரு மாதமானாலும், ‘அம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது’ என்ற சிறப்பைப் பெறுகிறது.
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:
﴿ شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ ﴾
‘ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது’. (அல்குர்ஆன் 2 : 185)
2. நோன்புக்குரிய மாதம்.
உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.
அல்லாஹ் சொல்கிறான்:
﴿ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ﴾
‘ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்’. (அல்குர்ஆன் 2 : 185)
3. சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ
‘ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)
மற்றொரு நபிமொழியில்,
..... وَفُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ…
‘..சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் மூடப்படுவதில்லை…’ நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)
முஃமின்களின் ஒரே குறிக்கோள் சொர்க்கத்தை அடைவதாகும், அந்த சொர்க்கத்தின் வாசல் கதவுகள் ரமளான் மாதத்தில் தட்டாமலேயே திறக்கப்படுகின்றன.
அந்த சொர்க்கத்தில் நுழைவதற்குறிய தகுதியை அடைவதற்கு சிறந்த மாதம் தான் ரமளான் மாதமாகும்.
மொத்தத்தில் சொர்க்கத்தில் நுழைவதற்கு முஃமின்கள் இதன் மூலம் ஆர்வமூட்டப்படுகிறார்கள். அதாவது சொர்க்க வாசலை திறந்து வைத்து, அதில் நுழைவதற்குரிய முயற்சியில் ஈடுபடுமாறு அல்லாஹ் முஃமின்களை அழைக்கிறான்.
4. வானத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِحَتْ اَبْوَابُ السَمَاء ..…
‘ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன…’ – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1899)
வானத்தின் வாயில்கள் இரண்டே சமயங்களில் தான் திறக்கப்படும். ஒன்று ரமளான் மாதம் மற்றொன்று கியாமத்து நாள். அல்லாஹ் சொல்கிறான்:
﴿ وَّ فُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ اَبْوَابَا ﴾
‘வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும’; – (அல்குர்ஆன் 78 : 19)
ரமளான் மாதத்தில் வானவர்களுக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு இருக்கும், ஏனெனில் அம்மாதத்தில் அவர்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
5. அருளின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
إِذَا كَانَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ الرَحْمَةِ …..
‘ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’…. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)
அருள் வாயில்கள் திறக்கப்பட்டு மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் ரமளான் மாதத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அபரிமிதமாக அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அருளினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்.
6. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம்.
… وَغُلِّقَتْ اَبْوَابُ الناَّرِ …..
‘….நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன….’ – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1956)
மற்றொரு நபிமொழியில்,
… وَغُلِّقَتْ اَبْوَابُ الناَّرِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ …..
‘…நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை…’ நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)
7. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்ற மாதம்.
وَسُلْسِلَتِ الشَّيَاطِيْنُ …..
‘….ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்’. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)
8. நல்லதைத் தேடுவோர் அழைக்கப்படும் மாதம்.
…وَيُنَادِيْ مُنَادٍ يَابَاغِيَ الْخَيْرِ اَقْبِلْ وَيَابَاغِيَ الشَّرِّ اَقْصِرْ …..
‘…நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்! என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்…’ – நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)
மற்றொரு அறிவிப்பில் ‘ஒரு வானவர் அழைக்கிறார்’ என்று வந்துள்ளது.
9. நரகவாதிகள் விடுதலை அடையும் மாதம்.
…وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَارِ وَذَلِكَ كُلُّ لَيْلَةٍ …..
‘…நரகத்திலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர். (இவ்வாறு விடுவிப்பது) ஒவ்வொரு இரவிலுமாகும்…’ – நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)
10. லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட மாதம்.
ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமளான் மாதத்தில் தான் இருக்கிறது.
…تَحَرُّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الغَسْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
‘…ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி – 722)
11. முன் பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்.
…مَنْ صَامَ رَمَضَانَ وَقَامَهُ إيْمَانًا وَاحْتِسَابًا غُفِّرَ لَهُ مَاتَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
‘நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 619)
12. தக்வா பயிற்சிக்குரிய மாதம்.
தக்வா எனும் இறையச்சத்தை பெறுவதற்கு சிறந்த பயிற்சியளிக்கும் மாதம். அல்லாஹ் சொல்கிறான்.
﴿ يَأَيُّهَا الَّذِيْنَ اَمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ﴾
‘ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நீங்கள் தக்வா உடையோராகலாம்’. (அல்குர்ஆன் 2:184)
13. அருள் செய்யப்பட்ட மாதம்.
قَدْ جَاءَكُمْ شَهْرُ مُبَارَكٌ …..
‘அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது….’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)
முடிவுரை
மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!
-islamiyadawa.com – Tamil Islamic Site based on Quran & Hadeeth
Kd;Diu
ukshdpd; Kjy; gpiwia fzf;fpLtjw;F> mjw;F Ke;ija khjkhfpa \/ghd; khjj;jpd; Muk;g> filrp ehl;fis fzf;fpLtjpYk;> ukshid mLj;j \t;thy; khjj;jpd; Kjy; ehis fzf;fpLtjpYk; xt;nthU K];ypKk; mf;fiw fhl;LtJ mtrpakhFk;.
1. \/ghd; khjj;jpd; ehl;fis fzf;fpLk; Kiw
‘ukshDf;fhf \/ghd; gpiwiaf; fzf;fpl;L thUq;fs;” vd;W egp (]y;) $wpajhf mG+`{iuuh (uyp) mwptpf;fpwhh;fs;. (jph;kpjp 682)
‘gpiwiag; ghh;j;J Nehd;G itAq;fs;! gpiwiag; ghh;j;J Nehd;ig tpLq;fs;! cq;fSf;F Nkf %l;lk; njd;gl;lhy; \/ghd; khjj;ij Kg;gJ ehl;fshf KOikg;gLj;Jq;fs;” vd;W egp (]y;) mth;fs; $wpdhh;fs;. (mwptpg;ghsh;: mG+`{iuuh (uyp)> Gfhhp 1909> jph;kpjp 624)
‘ukshDf;F Kd; Nehd;G Nehw;fhjPh;fs;…” egpnkhop. (mwptpg;ghsh;: ,g;D mg;gh];;; (uyp)> E}w;fs;: m`;kj; e]aP> jph;kpjp 624)
\/ghd; khjk; | re;jpu Mz;bd; 8 tJ khjkhFk;. ,J ukshDf;F Ke;jpa khjk;. |
ukshd; khjk; | re;jpu Mz;bd; 9 tJ khjkhFk;. Nehd;G itg;gjw;fhf ,iwtd; Njh;T nra;j khjk;. |
\t;thy; khjk; | re;jpu Mz;bd; 10 tJ khjkhFk;. ,J ukshDf;F mLj;j khjk;. |
ukshd; khjj;jpd; Kjy; gpiwia KbT nra;tjw;F> \/ghd; khjj;jpd; gpiwia fzf;fpl;L tu Ntz;Lk;. mjhtJ mk;khjj;jpd; Kjy; gpiwiaAk; filrp gpiwiaAk; ghh;g;gjpy; ftdk; nrYj;j Ntz;Lk; vd;gij Kjy; `jP]pypUe;J tpsq;f KbfpwJ.
ukshd; khjj;jpd; Kjy; gpiwiag; ghh;j;J Nehd;G itf;f Ntz;Lk;. \t;thy; khjj;jpd; Kjy; gpiwiag; ghh;j;J Nehd;ig tpl Ntz;Lk;. ukshd; khjj;jpd; Kjy; gpiw Nkf %l;lj;jpd; fhuzkhf njd;gl tpy;iyahdhy; \/ghd; khjj;ij Kg;gJ ehl;fshf KOikg;gLj;j Ntz;Lk;. mLj;j ehs; ukshdpd; Kjy; Nehd;ig itf;f Ntz;Lk; vd;gij ,uz;lhk; `jP]pypUe;Jk;> \/ghdpd; ,Wjp ehl;fspy; Nehd;G Nehw;ff; $lhJ vd;gij %d;whtJ `jP]pUe;Jk; tpsq;f KbfpwJ. (xUthpd; toikahd Nehd;G me;ehl;fspy; mike;J mth; Nehd;G Nehw;why; jtwpy;iy vd;gij kw;nwhU egpnkhop $WfpwJ)
‘ukshDf;F Kjy; ehSk;> mjw;F Kjy; ehSk; cq;fspy; vtUk; Nehd;G Nehw;ff; $lhJ. me;ehl;fspy; tof;fkhf Nehw;Fk; Nehd;G mike;jhNy jtpu! mt;thW mike;jhy; me;ehl;fspy; Nehd;G Nehw;fyhk;!” (mwptpg;ghsh;: mG+`{iuuh (uyp)> E}w;fs;: Gfhhp 1914> jph;kpjp 621)
2. ukshd;; khjj;jpd; ehl;fis fzf;fpLk; Kiw
‘xU khjk; vd;gJ ,Ugj;njhd;gJ ,uTfshFk;. vdNt gpiwiaf; fhzhky; ePq;fs; Nehd;G Nehw;fhjPh;fs;. cq;fSf;F Nkf %l;lk; njd;gLkhdhy; Kg;gJ ehl;fshf vz;zpf;ifia KOikg;gLj;Jq;fs;” vd;gJ egpnkhop. (mwptpg;ghsh;: mg;Jy;yh`; gpd; ckh; (uyp)> E}y;: Gfhhp 1907)
ukshd; khjj;jpd; Kjy; gpiw Nkf%l;lj;jhy; njd;gltpy;iyahdhy; vt;thW \/ghd; khjj;ij Kg;gJ ehl;fshf Mf;fpf; nfhs;s Ntz;LNkh mNj Nghd;W \t;thy; khjj;jpd; Kjy; gpiw mNj fhuzj;jpw;fhf njd;gltpy;iyahdhy; ukshd; khjj;ijAk; Kg;gJ ehl;fshf Mf;fpf; nfhs;s Ntz;Lk;. MdhYk; khjk; vd;gJ ,Ugj;njhd;gJ ,uTfshFk; vd;gijAk; ftdj;jpy; nfhz;L gpiwia ghh;f;f Kaw;rpf;f Ntz;Lk;. kw;nwhU `jP]py; 30 ehl;fs; vd;Wk; te;Js;sJ.
‘egp (]y;) mth;fSld; ehd; 29 ehl;fs; Nehd;G Nehw;wJ> Kg;gJ ehl;fs; Nehw;wij tpl mjpfkhFk;” vd;W ,g;D k];T+J (uyp) mwptpf;fpwhh;fs;. (E}w;fs;: mG+jhT+J 2315> jph;kpjp 625)
Nehd;G vd;why; Kg;gJ ehl;fs; jhd; vd;Wk; mt;thW Kg;gJ ehl;fs; mika tpy;iynad;why; kdtUj;jk; nfhs;tJk; jpUg;jp milahjpUg;gJk;> rpyNtis ukshd; khjj;jpd; Kjy; gpiwia ghh;j;j jfty;fis mwpe;J kf;fSf;Fr; nrhy;Yk; Mypk; my;yJ lTd;`h[pia jpl;LtJk; mwpahikahy; eilKiwapy; ,Ue;J tUk; epfo;TfshFk;. Mdhy; egpj;Njhoh; ,g;D k];T+J mth;fspd; $w;W mg;gbg;gl;lth;fSf;F ey;y mwpTiuahf mike;Js;sJ. 30 ehl;fs; Nehd;G itf;f Ntz;Lk; vd;gjw;fhf ukshDf;F Ke;jpa khjkhd \/ghd; khjj;jpd; ,Wjpapy; Nehd;G itg;gjw;F jil cs;sijAk; ftdj;jpy; nfhs;s Ntz;Lk;.
KbTiu
gpiwiag; ghh;g;gJk; mjd;gb Nehd;G itg;gJk; K];ypk;fs; xt;nthUth; kPJk; nghUg;Gk; flikAkhFk; vd;gij czh;e;J nray;gLNthkhf!
மறுமொழியொன்றை இடுங்கள்